Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் போதிய கட்டில்கள் இல்லை என்பதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், கழக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 கட்டில்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், நகர கழக செயலாளர் சுப.தமிழழகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்